மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் “கே” கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் “கே” கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:  “கே” கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தும் லீக் போட்டியின் இரண்டாவது டிவிசனில் கலந்துகொள்ள தகுதி பெறும். மாவட்டத்திற்குள் வசிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் உரிய ஆவணங்களுடன் இந்த போட்டியில் பங்கேற்கலாம். கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்ட லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இப்போட்டியில் விளையாட அனுமதி இல்லை. அணிகளை பதிவு செய்ய தேவையான படிவத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 33-கே தியேட்டர் ரோடு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். அணிகளை பதிவு செய்ய வரும் 26ம் தேதி(புதன்கிழமை) கடைசி நாளாகும். போட்டி நடத்தப்படும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு இணை செயலாளர் சிவசங்கர்(96770 00063) மற்றும் செயற்குழு உறுப்பினர் குமரவடிவேல்(94458 39766) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது அறிக்கையில் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: