வாகனம் மோதி பெண் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி பெத்தமேலுபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி ராஜம்மாள்(50). இவர், நேற்று முன்தினம் மாலை ராயக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வாகனம் ராஜம்மாள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி ராஜம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: