மாரடைப்பால் வங்கி ஊழியர் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் மகன் மாரியப்பன்(29). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த 11ம் தேதி மாலை குருபரப்பள்ளி பகுதிக்கு வேலை நிமித்தமாக சென்றார். அப்போது, திடீரென மாரியப்பன் மயங்கி விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு மாரியப்பன் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: