அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு நாளை நேர்காணல்

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நாளை(15ம் தேதி) கவுரவ விரிவுரையாளர் பணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் காலியாக உள்ள கணிதம்(காலிப்பணியிடங்கள் 2), நுண்ணுயிரியல்(காலிப்பணியிடம் 1) உயிர் வேதியியல்(காலிப்பணியிடம் 1), தமிழ் (காலிப்பணியிடம் 1) ஆகியவற்றுக்கான கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடையே நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 15ம் தேதி (நாளை) கல்லூரி முதல்வர் அறையில் நடைபெறும் நேர்காணலுக்கு அசல் சான்றிதழ்களுடன் காலை 10.30 மணியளவில் நேரில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கல்லூரி முதல்வர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: