தீயில் கருகி மூதாட்டி பலி

ராணிப்பேட்டை, மார்ச் 14: ராணிப்பேட்டை அடுத்த வாலாஜா ரோட்டில் உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி(70). இவர் நேற்று முன்தினம் மாலை சமையல் செய்வதற்காக காஸ் ஸ்டவ் பற்ற வைத்தார்.

அப்போது, எதிர்பாராமல் அவரது சேலையில் தீ பிடித்து உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: