வேலூரில் வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேலூர், மார்ச் 14: வேலூர் கஸ்பா அப்பாதுரை செட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று தேன்மொழி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: