மணல் கடத்தியவருக்கு வலை

வேலூர், மார்ச் 14: விரிஞ்சிபுரம் போலீஸ் எஸ்ஐ பழனி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மோட்டூர் குளக்கரை தண்ணீர் தொட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினார். அதைத்தொடர்ந்து, போலீசார் மாட்டு வண்டியை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories: