வெள்ளகோவில், மார்ச் 12:வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு காவிரி ஆற்றிலிருந்தும் அமராவதி ஆற்றிலிருந்தும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றிலிருந்து ஒரு நாளைக்கு 45 லட்சம் லிட்டர் குடிநீரும், அமராவதி ஆற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 13 லட்சம் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வந்தது. அமராவதி ஆறு வற்றி விட்டதால் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் விநியோகம் சரிவர இல்லை. காவிரி ஆற்று தண்ணீர் மட்டும் விநியோகிக்கப்படுகிறது. அமராவதி ஆற்று தண்ணீர் கிடைக்காததால் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது