போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருப்பூர், மார்ச் 12:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சப்-டிவிஷன் போக்குவரத்து பிரிவில் ஒரு  இன்ஸ்பெக்டர் தலைமையில் இரு எஸ்.ஐ.க்கள், 12 போலீசார் கொண்ட போக்குவரத்து  பிரிவு இயங்கி வருகிறது. தாராபுரம் போக்குவரத்து பிரிவில்  இன்ஸ்பெக்டராக  வேலை பார்த்த ராஜேந்திரன் வேலூர் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு இடமாற்றம்  செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கோத்தகிரியில் போக்குவரத்து பிரிவு  இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த சத்தியசீலன் தாராபுரத்திற்கு மாற்றப்பட்டு சில  நாட்களுக்கு முன் பொறுப்பேற்றுக்கொண்டார். தாராபுரம் சப்-டிவிஷனில்  போக்குவரத்து பிரிவில் இரு எஸ்.ஐ. பணியிடம் காலியாக இருப்பதால் வாகன  தணிக்கை மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணிகளில் தொய்வு  ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள இரு போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.க்கள் நியமிக்க  மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: