பாலக்காட்டில் 321 கிலோ குட்கா பறிமுதல்

பாலக்காடு, மார்ச் 12:பாலக்காடு பெரியகடைவீதியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கலால்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதன் பேரில் நேற்று முன் தினம் கலால்த்துறை இன்ஸ்பெக்டர் ராகேஷ் தலைமையிலான அதிகாரிகள் பெரியகடைவீதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வெற்றிலை மற்றும் மொபைல் கடையில் இருந்து 321 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த இம்ரான்ஹான்(32), ஹரிதாஸ்(30) ஆகியோரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: