சத்தியமங்கலம் பகுதியில் அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

சத்தியமங்கலம், மார்ச் 12: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் சத்தியமங்கலம் பகுதியில் அரசியல் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன் ஒருபகுதியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகளின்  பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர் விளம்பரங்களை  அழிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.  விளம்பரங்களை சுண்ணாம்பு பூசி அழித்தனர்.

தனியாருக்கு சொந்தமான சுவர்களின் அரசியல் கட்சியினரின் சின்னங்களை வரைய முறைப்படி சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: