கம்பம், மார்ச் 12: கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு வழங்கிய மின்விசிறி, கடிகாரம், சேர், பீரோ, மாணவர்கள் இருக்கை மற்றும் விளையாட்டுப் பொருட்களை பள்ளிக்கு எடுத்து வந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் குட்டியம்மாள் தலைமை தாங்கினார்.