நாகர்கோவில், மார்ச் 12: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (13ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தருகிறார்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 13ம்தேதி (நாளை) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகின்ற, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.