ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம். மு.க.ஸ்டாலின் நாளை நாகர்கோவில் வருகை

நாகர்கோவில், மார்ச் 12:  நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (13ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தருகிறார்.

 குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 13ம்தேதி (நாளை) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகின்ற, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

வழியில் வேறு நிகழ்ச்சிகள் ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய திமுகவினர் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். அவரது கட்டளையை மேற்கொண்டு, 13ம் நடைபெற இருக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தேவையான பணிகளை நிர்வாகிகள், தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக வருகை தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட பொருளாளர் கேட்சன், நாகர்கோவில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: