செங்கம், மார்ச் 12: செங்கம் அருகே காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமையில் வன பாதுகாவலர்கள் பாலச்சந்திரன், ஏழுமலை, ஜெயவேலு, வேலு, மோகன் ஆகியோர் நேற்று மதியம், தென்மலை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக 2 பைக்குகளில் வந்த 5 பேரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளை பார்த்ததும் அந்த மர்ம ஆசாமிகள் தப்பிேயாடினர். விரட்டிச்சென்ற வனத்துறையினர் 3 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர்.