அரியலூர், மார்ச் 8: அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் தி ராம்கோ சிமெண்ட் ஆலை தனக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் சுரங்கப்பணி நிறைவடைந்த 38 ஏக்கர் பகுதியை மூடி 38,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையின் சுரங்க மூத்த துணைப் பொதுமேலாளர் மகேஸ் கூறியது: எங்களது ஆலைக்கு சொந்தமான புதுப்பாளையம் கிராமத்திலுள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் 38 ஏக்கர் சுரங்கப்பணி நிறைவடைந்துள்ளது. இச்சுரங்கத்தை 70 லட்சம் டன் மண் கொண்டு மூடி அதன் மேல் மூலிகைச்செடிகள், நாவல், நெல்லி, மற்றும் வாழை மரங்களை நட்டு பசுமைப்பகுதியாக மாற்றியுள்ளனர். இதற்காக ரூ.13.94 கோடி செலவில் பசுமை பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.