திருவண்ணாமலை, மார்ச் 8: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 14ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டு(ஹால்டிக்கெட்) மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.