நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

வானூர், மார்ச் 8:  அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கழுப்பெரும்பாக்கம் வானூர் வட்டத்தில் துவங்கப்பட்டது. கல்லூரி தாளாளர் நித்தியானந்தம் அறிவுறுத்தலின்படி துவங்கப்பட்ட இம்முகாமில் கல்லூரி துணை முதல்வர் ஆரோக்கியநாதன் முன்னிலையில், சிறப்பு விருந்தினர்களாகிய கிராம நாட்டாமைகாரர்கள் துளசிங்கம், புருஷோத்தமன், ஏழுமலை, உலகநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அருணகிரி வரவேற்புரை வழங்க, பேராசிரியர் செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றினார். நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களும், ஊர் பொதுமக்களும் அக்னி சிறகுகள் நற்பணிசங்கம் மற்றும் பாரதி கலா நாடக மன்றம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: