கடுவனூர்- மூக்கனூர் இடையே தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்

சங்கராபுரம், மார்ச் 8: சங்கராபுரம் அடுத்துள்ளது மூக்கனூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பேருந்துவசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அதற்கு சாலை வசதிகள் இல்லாதது ஒரு காரணமாக இருந்து வந்தது.  மூக்கனூர்- கடுவனூர் இடையே கடந்த 10ஆண்டுக்கு முன் சாலை போடப்பட்டது. அது முறையான பராமரிப்பு இல்லாததால், குண்டும், குழியுமாக மாறியநிலையில் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. சாலையை சீரமைத்து தரவேண்டும் என வாகனஓட்டிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பிரதம மந்திரியின் கிராமபுற சாலை திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பில் மூக்கனூர்- கடுவனூர் இடையே சாலை போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: