ரவுடி ஊருக்குள் நுழைய தடை

திருபுவனை, மார்ச் 8: புதுவை மாநிலம் திருபுவனை அடுத்துள்ள சன்னியாசிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கதிர் என்கிற செங்கதிரவன் (45). இவர் மீது திருபுவனை காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு திருபுவனை காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் பிரியா பரிந்துரையின் பேரில் வில்லியனூர் வட்டாட்சியர் மேத்யூ பிரான்சிஸ், செங்கதிரவன் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: