புதுவை அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதுச்சேரி, மார்ச் 7: புதுவை அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு மார்ச் மாத ஊதியத்துடன் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி முதல் 9 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் 1-1-2019 முதல் அகவிலைப்படியை 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி, அதற்கான ஒப்புதலை முதல்வர் நாராயணசாமி அளித்துள்ளார். இதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி அரசு ஊழியர்களின் மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இதற்காக புதுச்சேரி அரசுக்கு மாதம் ரூ.3.60 கோடி கூடுதலாக செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: