ஆசிரியையிடம் 9 சவரன் செயின் பறிப்பு வந்தவாசியில் பைக்கில் சென்ற

வந்தவாசி, மார்ச் 7: வந்தவாசி டவுன் கம்மாள தெருவை சேர்ந்தவர் எம்.பிரபாகரன்(52) கிராம உதவியாளர். இவரது மனைவி மணிமேகலை(50) வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் திண்டிவனம் சாலை அருகே உள்ள நண்பர் சிவராமன் என்பவரது வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 9.30 மணியளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக வந்தபோது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி சரடு மற்றும் 3 சவரன் தங்கசெயினை அறுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டனர். இதுகுறித்து, மணிமேகலை வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: