பெரம்பலூர்,மார்ச் 6: அரும்பாவூர் பகுதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிடக்கோரி வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்டது அரும்பாவூர் பேரூராட்சி. இங்கு தாழ்த்தப்பட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கு இலவச வீட்டுமனை பட்டாகோரி விண்ணப்பித்து பலஆண்டுகளாக காத்துக் கிடக்கின்றனர்.