பெரம்பலூர்,மார்ச் 6: ஆதார் அடையாள அட்டை திருத்தம் செய்யவோ, புதிதாக பெறவோ பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தபால் அலுவலகங்களில் வசதி செய்யப்பட்டு உள்ளது. என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மத்திய மண்டலத்தில் 381 தபால் சேவை மையங்கள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்தில் செட்டிக்குளம். குன்னம். லப்பைகுடிக்காடு, பாடாலூர், பெரம்பலூர், வி.களத்தூர், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, பாடாலூர், பெரம்பலூர், வி.களத்தூர், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை ஆகியன உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில், வசிக்கும் அனைத்து கிராம மக்களுக்கும் இந்த சேவை குறித்து கிராம நிர்வாக அலவலகத்தின் வாயிலாக விளம்பரப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.