பெரம்பலூரில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

பெரம்பலூர், மார்ச் 6: பெரம்பலூரில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: வருவாய் கோட்ட அளவில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் பெரம்பலூர் கலெக்டரின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் மற்றும் ஆய்வு கூட்டம், ஆர்டிஓ அலுவலக கூட்டரங்கில் நாளை நடக்கிறது. பெரம்பலூர் கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் மற்றும் ஆலத்தூர் தாலுகாக்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவில் குறிப்பிட்டு நேரடியாக கலெக்டரிடம் அளிக்கலாம்.

அவ்வாறு பொதுமக்களால் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் துறை சார்ந்த அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள பொதுமக்கள், சிறப்பு குறைதீர்க்கும் நாளில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: