கோயில் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு

திருப்பூர்,பிப்.14: திருப்பூர் அனுப்பர்பாளையம் பெரியார் காலனியில் சமயபுரம்  மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு கோயில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பித்தளைவிளக்கு,மணி,பித்தளைஅண்டா,மணிவிளக்கு  உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் கோயிலுக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்கள் அழைக்கப்பட்டு கோயில் வளாகத்தில் பதிந்துள்ள ரேகைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Related Stories: