ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்

ஊட்டி, பிப். 14: தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 19வது அமைப்பு தினம் மற்றும் நீலகிரி மாவட்ட சங்கத்தின் 11வது அமைப்பு தின கூட்டம் ஊட்டியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதில்  மாவட்ட தலைவர் லிங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் காந்தராஜன் வரவேற்றார். கூட்டத்தின் போது, அரசு ஊழியர் சங்கத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர் திவாகரன் பேசினார்.

தொடர்ந்து மாநில பொது செயலாளர் கிருஷ்ணன் பேசுகையில்,‘ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் நடவடிக்கைகள் குறித்தும், சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட இணை செயலாளர்கள் ராமசந்திரன், அந்தோனிசாமி, தில்சாத், ராமன், மாநில செயற்குழு உறுப்பினர் பிலிப், வட்ட கிளை நிர்வாகிகள் மணி, ஜான் மனோகர், அரசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: