பந்தலூர், பிப்.14 : பந்தலூர் அருகே வீட்டில் பிடிப்பட்ட சிறுத்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பாட்டவல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ரயான் என்பவரின் வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது. இதையடுத்து வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இதில் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிடிப்பட்ட சிறுத்தையை பிதர்காடு வனச்சரக அலுவலக வளாகத்தில் கூண்டில் வைத்து கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த சிறுத்தை குணமடைந்து நல்லமுறையில் உள்ளது.