அம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா

நாமகிரிப்பேட்டை, பிப்.14: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில், பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணிஅம்மன் கோயிலில், ஆண்டுதோறும் மாசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் நடக்கும் தேர்திருவிழாவில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஆத்தூர், கரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த திருவிழாவின் போது குற்ற சம்பவங்களை தடுக்க, சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டு, குற்றம் செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, நேற்று முன்தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டுமல்லி உள்ளிட்ட பல வகை பூக்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Related Stories: