பேளுக்குறிச்சியில் தேமுதிக கொடி நாள் விழா

சேந்தமங்கலம், பிப்.14: சேந்தமங்கலம் ஒன்றிய தேமுதிக சார்பில், 19ம் ஆண்டு கொடிநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார்.  பேரூர் செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயன் கலந்துகொண்டு சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி ஆகிய இடங்களில் கொடியேற்றி வைத்து. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து பேளுக்குறிச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து 100 பேருக்கு மாவட்ட செயலாளர் விஜயன் தென்னங்கன்றுகளை வழங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சத்யா, விஜயராஜ், தமிழ், எழில்சேரன், அன்புராஜா, ரேணுகாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: