எழுமாத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

ஈரோடு, பிப். 14:   எழுமாத்தூர் துணை மின்நிலையத்தில் (14ம் தேதி) இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதகிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 88 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

அந்தியூர், பிப். 14:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி போகநாய்க்கனூரை சேர்ந்த செல்வராஜ் மகன் நந்தகுமார் (20). இவர் ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் ஐ.டி. பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று இரவு போகநாயக்கனூரில் இருந்து கீழ்வாணி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே குச்சிக்கிழங்கு லோடு ஏற்றி வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: