கோவை, பிப்.14:கோவை தடாகம் ரோட்டில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஒட்டல் மேனேஜ்மெண்டில் இன்டர் ஸ்கூல் போட்டிகள் நடந்தது. இதில், ஒட்டல் மேனேஜ்மெண்ட் துறை தொடர்பான சமையல் போட்டி, பூக்கள் வடிவமைப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திலகமணி, பிரேமா மருத்துவமனை இயக்குனர் கிருஷ்ணகுமார், பிரேமா மருத்துவமனை இரயோ சித்ரா, அமிர்தா நிறுவன சிஇஒ சுரேஷ், அமிர்தா நிறுவனத்தின் முதல்வர் சித்ரா, தேர்வாணையர் பர்சானா, பேராசிரியர்கள் வெங்கடாசலம், அஜீத்குமார், விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.