ஆலாந்துறையில் ராகு, கேது பெயர்ச்சி விழா பக்தர்கள் திரண்டனர்

தொண்டாமுத்தூர், பிப் 14: கோவை அருகே ஆலாந்துறை பெருமாள் கார்டனில் பழமையான புற்றுக்கண் வடிவிலான நாகசக்தி அம்மன் கோயில் வளாகம் கொங்கு நாட்டிலேயே ராகு, கேது பகவான்கள் துணைவியர்களுடன் உள்ள தலமாக உள்ளது.

 இங்கு ராகு, கேது பெயர்ச்சி விழா ேநற்று நடந்தது. பச்சாபாளையம் ஸ்ரீராம் சிவாச்சாரியார் தலைமையில் 108 கலசவேள்வி நடந்தது. நாதஸ்வர இன்னிசையுடன் வேதவிற்பன்னர்களால் மந்திரம் ஓதப்பட்டது. ராகு, கேது பகவான்கள் துணைவியர்களுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜையில் கலந்து கொண்டனர்.

Related Stories: