விவசாய தொழிலாளர்களுக்கு ₹25 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

தர்மபுரி, பிப்.14: தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட செயலாளர் பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ₹25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி, தற்போது வரை பல்வேறு தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிதி போதுமானது அல்ல. எனவே, விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, வறட்சி நிவாரணமாக ₹25 ஆயிரத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: