மலையூர் அடிவாரம் செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி அருகே கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை செல்லும் குண்டும், குழியுமான சாலை சீரமைக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாரப்பட்டி அடுத்துள்ள கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை வள்ளூர், சொரக்காப்பட்டி, அம்பேத்கர் காலனி, சொரக்காப்பட்டி கொட்டாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் மலையூர் மலை கிராமத்தில், சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் கோரிக்கையின் ேபரில், கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரையிலான தார்சாலை சீரமைப்பு பணிக்காக, பொக்லைன் மூலம் சுமார் 4கி.மீ தொலைவிற்கு தோண்டி ஜல்லிக்கற்கள் போடப்பட்டுள்ளது. பின்னர், சீரமைப்பு பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பணியை விரைவில் முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: