பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் உள்பட 4பேர் போக்சோவில் கைது

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் உள்பட 4 பேரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் மாரவாடி பழையூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, தர்மபுரி அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி மாணவி பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். மாலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர், தர்மபுரி டவுன் ேபாலீஸ் ஸ்டேஷனில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். அந்த புகாரில், தர்மபுரி செட்டிகரை பள்ளக்கொல்லை பகுதியை சேர்ந்த சிவராஜ் மகன் ரஞ்சித்குமார்(23) என்பவர், தனது மகளை கடத்தி சென்றதாக புகார் அளித்திருந்தனர். புகாரின் ேபரில், வாலிபரை ேபாலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதே பகுதியில் பதுங்கியிருந்த ரஞ்சித்தையும், மாணவியையும் மீட்டனர். பின்னர் மாணவியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாக ரஞ்சித்குமார், உடந்தையாக இருந்த அவரது தாயார் முனியம்மாள்(56), நண்பர் பிரகாஷ்(26), வெங்கடேஷ்(25) உள்பட 4 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் ேபாலீசார் கைது செய்தனர்.

Related Stories: