அரூர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் விபத்து அபாயம்

அரூர், பிப்.14: அரூர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.அரூரில் பெரியார் நகர், மேல்பாட்சாபேட்டை, பரசுராமன் தெரு உள்ளிட்ட பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மின் தேவைக்காக அமைக்கப்பட்ட மின் ஒயர்கள், பல இடங்களில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மின் ஒயர்களில் மோதி விபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் போது, மின் ஒயர்களில் மோதி அடிக்கடி விபத்தை ஏற்பட்டு வருகிறது. இதே ேபால், மேல்பாட்சாபேட்டை அரசு ஆண்கள் பள்ளி முன்புறம் தாழ்வான ஒயர்கள் செல்வதால், அடிக்கடி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மின் ஒயர்களை உயரமாக அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: