திருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, பிப்.14:  திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (15ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. 10 முதல் டிகிரி வரை படித்த 18 வயது நிரம்பிய 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களது அசல், நகல் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வரவேண்டும். இத்தகவலை கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: