ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

திருச்சி, பிப்.14: ரங்கம் வட்ட ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். புரவலர் கேசவன் வரவேற்றார். செயலாளர் பாலுநாயுடு, பொருளாளர் கலியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். ‘தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்வது பற்றி பரிசீலிக்கப்படும் எனதெரிவித்த நிதியமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை செயலாளர் ரங்கசாமி நன்றி கூறினார்.

Related Stories: