ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

திருச்சி, பிப்.14: திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சலீம் (56). இவரிடம் அதே பகுதி பென்சனர் தெருவை சேர்ந்த சர்ஜான்முகமது (60) என்பவர், கடந்த சில ஆண்டுக்கு முன் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக ரூ.4 லட்சம் கடன் வாங்கினார். இதற்காக பாண்ட் பேப்பரில் கையெழுத்திட்டு வழங்கி இருந்தார். ஆனால் கடனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பலமுறை கேட்டும் பணம் தரமறுத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து சலீம், பாலக்கரை போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். வழக்குபதிந்த குற்றப்பிரிவு எஸ்ஐ சேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: