திருச்சி, பிப். 14: திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியில் உள்ள விண்ணரசி மாதா கோயில் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாலக்கரை எஸ்ஐ அலாவுதீன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பியோடினார். அவரை விரட்டி பிடித்து சோதனை செய்ததில் மறைத்து வைத்திருந்த 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ.150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கெம்ஸ்டவுன் செபஸ்தியார் கோயில் தெருவை சேர்ந்த தினகரன் (40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.