மண்ணச்சநல்லூர், பிப்.14: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. ஒரு கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 149 மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் உண்டியல் காணிக்கைகள் வசூலானது.தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாது திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோயிலாகும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்படும் மாதமிருமுறை உண்டியலை திறந்து எண்ணப்படும். இந்த மாதத்தில் முதல் முறையாக நேற்று கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் அறநிலையதுறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.