கரூர் அருகே வாங்கலில் நிழற்குடையின்றி பயணிகள் வெயிலில் காத்திருப்பு

கரூர், பிப்.14:  கரூர் அருகே உள்ள வாங்கலில் உள்ள கடைவீதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் மோகனூரை இணைக்கும் வகையில் வாங்கல்-மோகனூர் உயர்மட்டப்பாலம் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அதிகமாகிவிட்டது. பேருந்துகளும் அதிக அளவில் சென்று வருகின்றன. எனினும் பயணிகள் காத்திருக்க நிழற்குடை அமைக்கவில்லை. பாலத்தை திறந்தபோதே நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் திறக்கப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடமின்றி தவிக்கின்றனர். அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் அடைந்து நின்றுகொண்டிருக்கின்றனர். கடைவீதியில் இரண்டு நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: