வரதட்சணை கொடுமையால் தாய் வீட்டுக்கு சென்ற மனைவிக்கு தெரியாமல் கணவர் 2வது திருமணம் 4 பேருக்கு வலைவீச்சு

ஒரத்தநாடு,  பிப். 14: வரதட்சணை கொடுமையால் தாய் வீட்டுக்கு சென்ற மனைவிக்கு தெரியாமல்  2ம் திருமணம் செய்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ஒரத்தநாடு  அடுத்த காதரபட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் சிகாமணி.  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது சொந்த ஊரில் உள்ளார்.  ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த ரங்கசாமி மகள் சுதாமணி. இவருக்கும்,  சிகாமணிக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில்  சிவாமணி மேலும் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால்  கோபித்து கொண்டு சுதாமணி கடந்த ஓராண்டாக தாய் வீட்டில் உள்ளார். தொடர்ந்து  வரதட்சணை வாங்கி வருமாறு கணவர் ெதால்லை கொடுத்து வந்ததால் பட்டுக்கோட்டை  மகளிர் போலீசில் சுதாமணி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் சிகாமணி முதல் மனைவிக்கு தெரியாமல்  அதே பகுதியை சேர்ந்த நர்ஸ் நதியா என்பவரை திருமணம் செய்து கொண்டது  தெரியவந்தது. இதையடுத்து சிகாமணி, நதியா, இவரது பெற்றோர் இந்திராணி,  அங்கமுத்து ஆகியோர் மீது வழக்குப்பதிந்து 4 பேரையும் போலீசார் தேடி  வருகின்றனர்.கல்லணை கால்வாயில் மூழ்கி கொத்தனார் பலி: ஒரத்தநாடு அருகே கல்லணை கால்வாயில் மூழ்கி கொத்தனார் பலியானார்.ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் சைபன் பாலம் பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீhpல் குளிக்கச்சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி கருமாரி தெருவை சேர்ந்தவர் குமார். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஊரணிபுரத்துக்கு குமார் வந்திருந்தார். அப்போது ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் சைபன் பாலம் பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் குமார் குளித்தார். அப்போது தண்ணீரில் மூழ்கி குமார் பலியானார். இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: