பேராவூரணியில் நாளை கழனிவாசல் ஊராட்சி முன்னாள் தலைவர் முருகன் இல்ல திருமண விழா திருநாவுக்கரசர் பங்கேற்பு

சேதுபாவாசத்திரம், பிப். 14: பேராவூரணியில் நாளை கழனிவாசல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பிருமான ஏ.முருகன் இல்ல திருமண விழா காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர்  தலைமையில் நடக்கிறது.சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பிருமான ஏ.முருகன் இல்ல திருமண விழா, பேராவூரணி ஸ்ரீவிநாயகா திருமண மஹாலில்  நாளை நடக்கிறது.கழனிவாசல் ஏ.முருகன்- மல்லிகாவின் மகன் செங்குட்டுவன்- புதுக்கோட்டை மாவட்டம் காவல் உதவி ஆய்வாளர் ஆ.பழனி- வைஜெயந்தியின் மகள் திவபாரதி ஆகியோர் திருமணத்தை தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்கிறார். தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திமுக ஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், காஞ்சிபுரம் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் ரூபி ஆர்.மனோகரன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தலைமை பொறியாளர் ஓய்வு சிலட்டூர் தங்கவேல், அமமுக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கரிகாலன், அமமுக மாநில துணை செயலாளர் தாம்பரம் நாராயணன், அமமுக நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சேர்மன் ஏ.ஜி.டி.பார்க் போரூர் ஏ.ஜி.தாமஸ் முன்னிலை வகிக்கின்றனர்.மேலும் முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ் பேரியக்கம் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்தோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர்.

Related Stories: