தஞ்சை, பிப். 14: தஞ்சை ஆற்றிலிருந்து மணல் கடத்திய 8 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.தஞ்சை பள்ளியக்காரம் பகுதியில் உள்ள ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து தாசில்தார் அருணகிரி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் மணல் அள்ளி கடத்தி வந்த 8 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தஞ்சை தாசில்தார் அலுவலகத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.