நாகை, பிப்.14:நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காமேஸ்வரம், பிரதாபராமபுரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைகாரணிருப்பு வேதாரண்யம் பகுதி விவசாயிகளுக்கு ஹெல்ப்பேக் இந்தியா மற்றும் கஜா புயல் வாழ்வாதார புரனமைப்பு திட்டம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஹெல்ப்பேக் இந்தியா திட்ட மேலாண்மை தலைமை வேணுகோபால் தலைமை வகித்தார். முதியோர் அமைப்பு இயக்குநர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குநர் தயாளன் கலந்து கொண்டு 35,000 விவசாயிகளுக்கு மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை போன்ற மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முதியோர் நல இயக்க தலைவர் அருணாச்சலம், ஏகாம்பரம் உள்ளிட்ட எராளமானவர்கள் கலந்து கொண்டனர்.