மணமேல்குடி அருகே கடல் பல்லிகள் பறிமுதல்

மணமேல்குடி, பிப்.14:  மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினம் செல்லனேந்தல் கடற்கரை பகுதியில் திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, தலைமை காவலர் கணேசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், செல்லனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (52) என்றும், தடை செய்யப்பட்ட  1600 கடல் பல்லிகள் வைத்திருந்தது தெரியவந்தது.இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் ஆகும். மேல் நடவடிக்கைக்காக புதுக்கோட்டை வனவர் துர்காரேவதி வசம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: