ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

புதுக்கோட்டை,பிப்.14: புதுக்கோட்டை, பிப். 14: புதுக்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மார்க்கெட் சந்திப்பில்  ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில்  இரும்பு கம்பியை உடைத்து சன்னதி முன்பாக கோயிலில் உள்ள உண்டியலின் சிமென்ட்  தரைமேட்டை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். மேலும் உண்டியலில் இருந்த பக்தர்களின் காணிக்கையை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories: