நெல்லையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நெல்லை, பிப். 14:நெல்லையில் நாளை (15ம் தேதி) விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (15ம் தேதி) கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 11.00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: