டேங்க் ஆபரேட்டர் மீது தாக்குதல்

திருக்கோவிலூர், பிப். 14:திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியை சேர்ந்தவர் முரளி(40). டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும் இவர், சம்பவத்தன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம்(40) மற்றும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத 3 பேரும் முரளியை ஆபாசமாக திட்டி சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து முரளி, அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆறுமுகம் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அதில் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Related Stories: